test1

test1

Welcome to StackEdit!

Hi! I’m your first Markdown file in StackEdit. If you want to learn about StackEdit, you can read me. If you want to play with Markdown, you can edit me. Once you have finished with me, you can create new files by opening the file explorer on the left corner of the navigation bar.

Files

StackEdit stores your files in your browser, which means all your files are automatically saved locally and are accessible offline!

Create files and folders

The file explorer is accessible using the button in left corner of the navigation bar. You can create a new file by clicking the New file button in the file explorer. You can also create folders by clicking the New folder button.

Switch to another file

All your files are listed in the file explorer. You can switch from one to another by clicking a file in the list.

Rename a file

You can rename the current file by clicking the file name in the navigation bar or by clicking the Rename button in the file explorer.

Delete a file

You can delete the current file by clicking the Remove button in the file explorer. The file will be moved into the Trash folder and automatically deleted after 7 days of inactivity.

Export a file

You can export the current file by clicking Export to disk in the menu. You can choose to export the file as plain Markdown, as HTML using a Handlebars template or as a PDF.

Synchronization

Synchronization is one of the biggest features of StackEdit. It enables you to synchronize any file in your workspace with other files stored in your Google Drive, your Dropbox and your GitHub accounts. This allows you to keep writing on other devices, collaborate with people you share the file with, integrate easily into your workflow… The synchronization mechanism takes place every minute in the background, downloading, merging, and uploading file modifications.

There are two types of synchronization and they can complement each other:

  • The workspace synchronization will sync all your files, folders and settings automatically. This will allow you to fetch your workspace on any other device.

    To start syncing your workspace, just sign in with Google in the menu.

  • The file synchronization will keep one file of the workspace synced with one or multiple files in Google Drive, Dropbox or GitHub.

    Before starting to sync files, you must link an account in the Synchronize sub-menu.

Open a file

You can open a file from Google Drive, Dropbox or GitHub by opening the Synchronize sub-menu and clicking Open from. Once opened in the workspace, any modification in the file will be automatically synced.

Save a file

You can save any file of the workspace to Google Drive, Dropbox or GitHub by opening the Synchronize sub-menu and clicking Save on. Even if a file in the workspace is already synced, you can save it to another location. StackEdit can sync one file with multiple locations and accounts.

Synchronize a file

Once your file is linked to a synchronized location, StackEdit will periodically synchronize it by downloading/uploading any modification. A merge will be performed if necessary and conflicts will be resolved.

If you just have modified your file and you want to force syncing, click the Synchronize now button in the navigation bar.

Note: The Synchronize now button is disabled if you have no file to synchronize.

Manage file synchronization

Since one file can be synced with multiple locations, you can list and manage synchronized locations by clicking File synchronization in the Synchronize sub-menu. This allows you to list and remove synchronized locations that are linked to your file.

Publication

Publishing in StackEdit makes it simple for you to publish online your files. Once you’re happy with a file, you can publish it to different hosting platforms like Blogger, Dropbox, Gist, GitHub, Google Drive, WordPress and Zendesk. With Handlebars templates, you have full control over what you export.

Before starting to publish, you must link an account in the Publish sub-menu.

Publish a File

You can publish your file by opening the Publish sub-menu and by clicking Publish to. For some locations, you can choose between the following formats:

  • Markdown: publish the Markdown text on a website that can interpret it (GitHub for instance),
  • HTML: publish the file converted to HTML via a Handlebars template (on a blog for example).

Update a publication

After publishing, StackEdit keeps your file linked to that publication which makes it easy for you to re-publish it. Once you have modified your file and you want to update your publication, click on the Publish now button in the navigation bar.

Note: The Publish now button is disabled if your file has not been published yet.

Manage file publication

Since one file can be published to multiple locations, you can list and manage publish locations by clicking File publication in the Publish sub-menu. This allows you to list and remove publication locations that are linked to your file.

Markdown extensions

StackEdit extends the standard Markdown syntax by adding extra Markdown extensions, providing you with some nice features.

ProTip: You can disable any Markdown extension in the File properties dialog.

SmartyPants

SmartyPants converts ASCII punctuation characters into “smart” typographic punctuation HTML entities. For example:

ASCII HTML
Single backticks 'Isn't this fun?' ‘Isn’t this fun?’
Quotes "Isn't this fun?" “Isn’t this fun?”
Dashes -- is en-dash, --- is em-dash – is en-dash, — is em-dash

KaTeX

You can render LaTeX mathematical expressions using KaTeX:

The Gamma function satisfying Γ(n)=(n−1)!∀n∈N\Gamma(n) = (n-1)!\quad\forall n\in\mathbb NΓ(n)=(n1)!nN is via the Euler integral

Γ(z)=∫0∞tz−1e−tdt.
\Gamma(z) = \int_0^\infty t^{z-1}e^{-t}dt\,.
Γ(z)=0tz1etdt.

You can find more information about LaTeX mathematical expressions here.

UML diagrams

You can render UML diagrams using Mermaid. For example, this will produce a sequence diagram:

AliceBobJohnHello Bob, how are you?How about you John?I am good thanks!I am good thanks!Bob thinks a longlong time, so longthat the text doesnot fit on a row.Checking with John…Yes… John, how are you?AliceBobJohn

And this will produce a flow chart:

Link text
Square Rect
Circle
Round Rect
Rhombus

மொழியும் மானுட வளர்ச்சியும்

உலகில் உள்ளன பல நாடுகள்; அவற்றின் மானுட வளர்ச்சி என்று ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை அளந்து அதனை காலந்தோறும் வெளியிட்டு வருகிறது. சில நாடுகள் அதில் சிறந்தும், சில நாடுகள் இன்றியும் விளங்குகின்றன. இந்த வேற்றுமைக்கும் மொழி சார்ந்த செயல்பாடுகளுக்கும் உள்ள உறவை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

 

Graph of HDI variation across nations

Std

Variation

இந்த வேறுபாட்டுக்குக் காரணிகள் பல இருக்கலாம். நாம் சமூகத்தின் மொழி சார்ந்த செயல்பாடு என்ற ஒற்றைக் காரணி எவ்வளவு தாக்கத்தைச் செலுத்துகிறது என ஆய்வோம்.

 

மானுடரின் தோற்றமும் மொழியும்

விலங்கிடமிருந்து நம்மை விலக்கிக் காட்டுவனற்றுள் முதன்மையானது நாம் நினைத்ததை மொழிய இயன்றவர்கள் என்பது.

உயிரினங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்றாக பரிணமிக்கின்றன; பொதுவாக எளியனவற்றிலிருந்து சிக்கலானவற்றுக்கு. பரிணாமத்தின் அடிப்படை – ஜீன்கள் இயற்கைத் தேர்வுக்குள்ளாவதாகும். பரிணாமச் செயல்பாட்டை பயனுள்ள தகவல் சேர்மானம் என்றும் காணலாம். அதாவது மூலத்தை விட,  பரிணமித்தது, அதிக பயனுள்ள தகவல்களை, தனது ஜீன் தொகுப்பில் கொண்டிருக்கும்.

க்ராப்

ஒரு உயிரினத்தில் இயற்கைத் தேர்வு நிகழ்வது என்பது அதன் உறுப்பினர்களில் தகுதியற்றன அடுத்த தலைமுறையை உருவாக்காது மடிவது; இதன் மூலம்  பயனுள்ள மாற்றங்கள் ஜீன் தொகுப்பில் தொடர்ந்து சேகரமாவது. ஆகவே ஜீன் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பிட் தகவலும் பல வலிகளை விலையாகக் கொடுத்துப் பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்பட்டு ஜீனில் உள்ள தகவல்கள் ஒரு மானை சிங்கத்தைக் கண்டதும் ஓடவும், அதற்கு ஏதுவான கால்களை ஆக்கவுமாக அந்த உயிரினத்துக்குப் பயன்படுகின்றன.

இப்படித்தான் எல்லா உயிரினத்திலும் நடக்கிறது; மனிதனைத் தவிர.

(1) இன்று நீங்கள் சாலையில் நடந்து செல்கிறீர்கள். குழந்தைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பந்து உங்கள் முகத்தில் அடித்து விடுகிறது. நீங்கள் உணராமலே கண் தானாக மூடிக் கொண்டிருக்கும். இதனைச் செய்தது உங்களின் ஜீனில் உள்ள தகவல்கள். ஜீன் அளவில் நிகழ்ந்த அனுபவம் பயன்பட்டுள்ளது.

(2) நீங்கள் பிறந்த போது சைக்கிள் ஓட்டத் தெரியாது. குழந்தைப் பருவத்தில் கற்றீர்கள். பல நாட்களுக்குப் பிறகு இன்று சைக்கிளை ஓட்டுகிறீர்கள். நீங்கள் மறுபடியும் முதலிலிருந்து கற்பதில்லை. இங்கு ஒரு தனி நபரின் சொந்த அனுபவம் பயன்பட்டுள்ளது.

(3) ஒரு மலைப் பாதையில் பழங்குடியினர் நடந்து போகிறார்கள். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட பறவை குறிப்பிட்ட ஒலியை எழுப்பியவாறு பறக்கிறது. அது உயிரைப் பறிக்கும் விலங்கு இருப்பதன் அறிகுறி எனச் சொல்லி அந்தப் பழங்குடிக் கூட்டம் பின்வாங்கித் திரும்புகிறது. இங்கு கூட்டமாக அவர்கள் ஏதோ ஒரு தலைமுறையில் கற்ற அனுபவம் பயன்பட்டுள்ளது.

(4) நீங்கள் ஒரு சர்க்யூட்டை ஆக்குகிறீர்கள். இதற்கு மின்னழுத்தம், மின்னோட்டம் போன்ற அப்ஸ்ட்றாக்டான விசயங்களைப் பற்றி யோசிக்கிறீர்கள்; கணித மாதிரிகளைக் கொண்டு கணக்கிடுகிறீர்கள். இங்கு பயன்பட்டது இவை நீங்கள் சொந்த அனுபவத்தில் கண்ட தகவல்கள் அல்ல. (3) உடன் ஒப்பிடவும் இது வேறுபட்டது. எப்படி எனில் இவை ஒரு அனுபவம் மட்டுமல்ல; அனுபவம் அப்ஸ்ட்றாக்ட் விசயமாக ஆக்கப்பட்டு பயன்பட்டுள்ளது.

[[ டேபிள்:

>> (1) (2) (3) (4)

தாவரம்

விலங்குகள்

மனிதன்

]]

 

நினைப்பு, மொழி, இறை

 

மக்களுடன் பின்னிக்கிடக்கும் மொழி

ஈராண்டுகளுக்கு முன்னர் இது நடந்தது. எனது பையனுக்கு ஒன்றரை வயது இருக்கும். அவனது அத்தை மகனுக்கும் அதே வயது. இருவரும் சேர்ந்து விளையாடுவர்.

காரைப் பின்னாடி நகர்த்திவைப்பதைப் பார்ப்பது அவர்களுக்கு பெரிய வேடிக்கை. அப்போது எழுப்பப்படும் எச்சரிக்கை ஓசை, ஒருவர் பின்னே இருந்து கொண்டு பார்த்துப் பார்த்து, “வரலாம், வரலாம்” என்று கூறுவது, ஓட்டுனர் கவனமாக நாலாபுறமும் பார்த்து மெதுவாக வருவது, பின்னர் சக்கரத்தைத் திருப்பித் திருப்பி முன்னும் பின்னும் நகர்த்துவது, எல்லாமே வேடிக்கைதான்.

நமக்கு இது ஒன்றுமில்லாத விடயம். அவர்களுக்கு அப்படி இருக்காதாயிருக்கும்.

இரண்டு மூன்று பேர் சில விதிமுறைகளை, ஒரு protocol-ஐ ஏற்படுத்திக் கொண்டு,  தங்களுக்குள் ஒத்துழைத்து செய்து முடிப்பது அந்தச் சின்னஞ்சிறு மனிதர்களின் உள்ளங்களைக் கிளர்த்தி இருக்க வேண்டும்.

அவர்கள் இதைப் போலச்செய்து விளையாடினார்கள். ஒருவன் காற்றில் ஸ்டியரிங்கைத் திருப்புவான். ஒருவன் பின்னால் இருந்து கொண்டு வரலாம், வரலாம் என்பான். கார் எழுப்பும் எச்சரிக்கை ஒலியும் உற்சாகமாக வாயிலிருந்து எழும்பும்.

ஒருவன் “கக்கிக் காக்கி கீக்கீ” என்று பாடுவான். இன்னொருவன் “லில்லி லில்லி லில்லி” என்று ஒலி எழுப்புவான்.

இது எனக்கு வியப்பாயிருந்தது. அவர்கள் எழுப்பும் ஒலி எழுப்ப விரும்பும் ஒலியிலிருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. அந்த வேறுபாடு சும்மா வேறுபாடு இல்லை.  காரிலிருந்து வரும் ஒலி analog signal ஆகவும் அவர்கள் எழுப்பிய ஒலி ஒருவகையில் digital ஆகவும் இருந்தது. அந்த டிஜிட்டல் சிக்னலின் பல்வேறு அனுமதிக்கப்பட்ட நிலைகளாக தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதாவது, அவர்கள் எழுப்பிய ஒலி தமிழ் எழுத்துக்களை ஒருவர் எழுதி கொஞ்சம் ராகத்துடன் வாசித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

Drawing (1)

அவர்களுக்கோ வயது ஒன்றரை மட்டுமே. அவர்கள் இன்னும் தமிழின் எழுத்து வரிசையைக் கற்று அறியவில்லை. ஆனால் அவர்கள் செய்திருப்பதோ எழுத்து வரிசையைக் கற்றிருந்தால் மட்டுமே சாத்தியம். இந்த முரண்பாட்டுக்கு விடை என்ன?

நாம் பேசுவதைக் குழந்தைகள் தொடர்ந்து நினைப்பின்றி கவனிக்கிறார்கள். எந்த அளவுக்கு மேல் செல்லும்போது ஓர் ஓசை வேறுபாடு கவனிக்கத்தக்கதாகிறது என்பதை பல பேச்சுக்களை ஆராய்வதன் மூலம் மூளை நரம்பியல் மண்டலம் அறிகிறது. பிறந்து ஆறு மாதங்களுக்குள் தனது தாய் மொழியின் எழுத்து வரிசையை ஒவ்வொரு குழந்தையும் எந்த முயற்சியுமின்றி அறிந்து விடுகிறது.

பலருடைய பேச்சையும் கவனித்து நீங்கள் கூறுகிற “அம்மா”-வின் முதல் ஓசையும், இன்னொருவர் கூறுகிற “அக்கா”-வின் முதல் ஓசையும் ஒன்றாகக் கருதலாம் என்பதையும், “ஈட்டி” இன் முதல் ஓசையை முந்திய இரண்டிலிருந்தும் வேறுபட்டது என்பதையும் அறிந்து விடுகிறார்கள்.

நமக்குத் தெரியாத ஒரு மொழிப் பேச்சைத் தொடர்ந்து கேட்பதன் மூலம் அம்மொழியின் எழுத்துக்களை நம்மால் சொல்ல முடியுமா? இது மிகவும் கடினமானது. மிகப் பெரிய செயற்கை அறிவு நுட்பங்களால், பலர் முயன்று ப்ரோகிராம் எழுதி, இதனை செய்யலாம். இத்தனை கடினமான ஒரு செயல் ஒவ்வொரு குழந்தையின் மூளையிலும் பெரிதாக எந்த அலட்டலுமின்றி பிறந்து ஆறே மாதங்களில் நடந்து விடுகிறது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் மொழி என்பது எவ்வளவுக்கு மானுடத்துடனுன் பிணைந்திருக்கிறது என்று காட்ட. மொழியைக் கற்பது என்பது சைக்கிள் ஓட்டக் கற்பது போன்றதல்ல.

ஒரு மொழியை இயல்பாகக் கற்க அம்மொழி பேசுபவர்களால் சூழப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் எண்ண வெளிப்பாடுகளில் முங்க வேண்டும். ஆகவே, மொழி தனிமனித விடயம் அல்ல, அது மனிதப் பின்னலின் அங்கம்.

Drawing (2)

 

Democracy [1]

What makes some societies/countries more successful than others. We will assume all individuals are equally good. All are striving to better their lives. Then how the societies differ. In one society, people are having to work hard to achieve a certain quality of life whereas in another the same is made available for every member without any effort.

We will use the human development index as a measure of this success for now. This will make it easier to verify any hypothesis as we have a good amount of data available.

I believe the fundamental cause for development is with devising cooperative strategies. The most important one being the legislature. With the legislature, a society can ‘consciously’ alter the ‘environment’ to align the individual’s immediate optimal strategy with that of society in the long run. In other words,  often an inviduals optimal strategy might be moving the system to a local optimal point, whereas with a legislature and a designed reward and punishment, the system moves towards global optimum and benefits all individuals. Thus, a society can move faster towards the ideal state. The legislature itself could be designed to use feedback to achieve this goal. Democracy as we call this is being in practice in many societies today. Yet we see variation among societies. How do we explain this? Is voting the only criterion for democracy. How do we define democracy? Can we compare two democracies and say one is better than the other? Is it possible to measure democracy of a given practice?

One important area of cooperation is how a society manages information to find new useful information more easily. The language, formal schools, magazines, literature, interest groups, patenting, bedtime stories and all contribute to this. Is there any way we can compare one society with another on this front?

அறிமுகம் – rev2

‘There is grandeur in this view of life … that from so simple a beginning endless forms most beautiful and most wonderful have been, and are being, evolved.’
 ’ஒரு எளிய தொடக்கத்திலிருந்து எண்ணில் அடங்கா வடிவங்களில் அழகானவையும், அற்புதமானவையும் பரிணமித்தன, பரிணமித்துக்கொண்டு இருக்கின்றன என்ற உயிர் பற்றிய இந்தப் பார்வைதான் எத்தனை விசாலமானது. – சார்லஸ் டார்வின்’

உயிரினங்களின் தோற்றம் குறித்து (On the origin of species) என்ற சார்லஸ் டார்வினின் புகழ்பெற்ற நூலில் இருந்து.

இந்த உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் – மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து – எப்படித் தோன்றின என்று நாம் அனைவருமே ஒரு முறையாவது வியந்திருப்போம். எத்தனை எத்தனை வடிவங்கள். அமைதியாக நகரும் நத்தை. மானை அடித்துத் தின்னும் புலி. மரங்கள் செடிகள் கொடிகள். அழகிய நிறங்களில் கண்ணைப் பறிக்கும் பூக்கள், அவற்றின் மணம். எல்லாம் நம் மனதைக் கொள்ளை கொள்கின்றன.

உயிரினங்கள் எப்படித் தொன்றின? எல்லாம் ஒரே நேரத்தில் தோன்றினவா? அல்லது முதலில் ஒன்றோ சிலவோ தோன்றி, பின்னர் ஒன்று மாற்றம் பெற்று மற்றொன்றாகி, அதிலிருந்து பிறிதொன்று தோன்றி என்று தொடர்ந்து நிகழ்ந்து இன்றுள்ள நிலையை அடைந்தனவா?

உயிரினங்கள் தானாகத் தோன்றினவா? அல்லது யாராவது அவற்றைப் படைத்தார்களா?

உயிரினங்கள் தானாகத் தோன்றி இருக்க முடியுமா? இவ்வளவு சிக்கலான உடலமைப்பும், இயக்கமும் கொண்ட உயிரினங்கள் தானாகத் தோன்றுவது சாத்தியமற்றது இல்லையா?

உயிர்களின் தோற்றத்துக்கும் இருப்புக்கும் பின்னால் என்ன நோக்கம் இருக்க முடியும். நம்மைப் போல சிந்திக்கின்ற யாரோ ஒருவர் இவற்றைப் படைத்திருப்பாரோ? எனில் அவரை யார் படைத்தார்? அவர் தானாகத் தோன்றினாரா? அவர் தானாகத் தோன்ற முடியும் என்றால் உயிரினங்கள் ஏன் தோன்ற முடியாது?

உங்களுடைய கண் மூலம் உலகைக் காண முடிகிறது. காது ஓசையைக் கேட்க உதவுகிறது. இன்னும் முக்கியமாக காது நாம் எவ்வளவு சாய்ந்திருக்கிறோம் போன்ற தகவல்களை மூளைக்கு அளிக்கிறது. இதனால்தான் நாம் விழாமல் எழவும் உட்காரவும் நடக்கவும் ஓடவும் முடிகிறது. காதுக்குள் ஒரு திரவம் இருக்கிறது. நாம் நகரும்போதும் சாயும்போதும் அதற்கேற்ப அந்தத் திரவம் அசைகிறது. இந்த அசைவை காதில் உள்ள நரம்புகள் உணர்ந்து மூளைக்கு அனுப்புகின்றன. மூளை இந்தத் தகவலைப் பயன்படுத்தி நாம் விழாமல் இருக்க எந்தக் காலில் எந்த அளவ இயக்கம் தேவை என்று கணக்கிட்டு அதைக் கட்டளையாக கால்களுக்கு உரிய நரம்புகளின் வாயிலாக அனுப்புகிறது. இவ்வாறாக நாம் விழாமல் நடப்பது சாத்தியமாகிறது.

இப்படியாக ஒவ்வொறு உறுப்பும் சிக்கலான அமைப்புடன் சிக்கலான பல வேலைகளைச் செய்து அந்த உயிரினம் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் உதவுகின்றன.

இவ்வளவு சிக்கலான உறுப்புகளின் தொகுப்பாக இருக்கும் உயிரிகள் தானாகவே தொன்றியிருக்க முடியுமா என்ன?

நீங்கள் ஒரு மலைப்பாதையில் தனியாக நடந்து செல்கிறீர்கள். ஏதோ யோசனையில் நடந்து செல்லும் உங்கள் காலில் ஏதோ தட்டியதால் கீழே பார்க்கிறீர்கள். அது ஒரு கல்லாக இருந்தால் அது அங்கு இயற்கையாகத் தோன்றி கிடக்கிறது என்று சொல்லலாம். அதுவே ஒரு கைக்கடிகாரமாக இருந்தால்? ஒரு கைக்கடிகாரம் இயற்கையாக தோன்ற முடியுமா? ஒரு கைக்கடிகாரம் இயற்கையாகத் தோன்ற முடியும் என்று சொல்ல முடிவதில்லை. ஏன்?


கல்லுக்கு என்று தனியாக ஒரு நோக்கமும் கிடையாது. ஆனால் கைக்கடிகாரத்துக்கு நேரத்தைக் காண்பிக்க வேண்டும் என்று ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தை முடிந்த அளவு செம்மையாக நிறைவேற்றுமாறு அதன் உள்ளமைப்பும் இயக்கமும் இருக்கிறது. கல்லுடன் ஒப்பிட கடிகாரம் சிக்கலான அமைப்பும் இயக்கமும் கொண்டது என்று சொல்லலாம். இப்படியாக தனித்த நோக்கத்தையும் சிக்கலான அமைப்பும் இயக்கமும் கொண்டன இயற்கையாகத் தொன்றி இருக்க முடியாது என்று ஆகிறது.

ஒவ்வொறு உறுப்பும் சிக்கலான அமைப்பும் இயக்கமும் தனித்த நோக்கமும் கொண்டன என்பதால் அத்தகைய உறுப்புகளின் தொகுப்பாக இருக்கும் உயிரி இயற்கையாக தோன்றி இருக்க சாத்தியமில்லை என்று ஆகிறது.

தான் தோன்றல் கொள்கை:
+ உயிரினங்கள் தானாகத் தோன்றின
– உயிரினங்கள் சிக்கலான அமைப்பும், இயக்கமும் கொண்டன. இத்தகையன தானாகத் தோன்ற சாத்தியம் குறைவு.

தானாகத் தோன்றுவது சாத்தியமில்லை என்றால் யாராவது படைத்தார்களா? இப்போது உயிரி தோற்றத்திற்கு படைப்பு மட்டும்தான் ஒரே மாற்று சாத்தியமா? காண்போம். முதலில் படைப்பு சாத்தியமா என்பதைக் காண்போம்.

உயிரினங்களை சக்தி மிகுந்த எல்லாம் வல்ல ஒருவர் படைத்தார் என்ற கொள்கை பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் நம்பப்பட்டு வந்தது. இன்றும் பலர் நம்புகின்றனர். பல மதங்கள் தங்களது புராணங்களிலும் புனித நூல்களிலும் இதை விரித்து விளக்கியுள்ளன.

உயிரினங்கள் ஒருவரால் படைக்கப்பட்டன என்றால் அந்த படைத்தவர் எப்படித் தோன்றினார். அவருக்கு நோக்கம் உண்டு ஆனால் உடல் இல்லை என்று சொல்லப்படுகிறது. பொதுவாக இவர் அல்லது இது கடவுள் என்று அறியப்படுகிறது. அவர் இயற்கையாகத் தோன்றினாரா? அவர் இயற்கையாகத் தோன்ற முடியும் என்றால் ஏன் உயிரிகள் தாங்களே இயற்கையாகத் தோன்றி இருக்கக் கூடாது.

கடவுளின் இருப்பு ஒரு அடிப்படை இயற்கை விதியாக இருப்பதே ஒரே சாத்தியம். எனினும் அப்படி ஒரு இயற்கை விதி இருக்கிறதா என்பதை நடைமுறை நிகழ்வுகளிலிருந்து பெறப்படும் ஆதாரங்களின் மூலமே மெய்ப்பிக்க முடியும். அப்படி ஏதும் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

கடவுள் என்பவர் நோக்கத்தை மட்டும் உடையவர் – ஆனால் பரு உடலைக் கொண்டவரல்ல என்றால் பருப்பொருள் அல்லாத ஒன்று பருப்பொருளைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பருப்பொருள் என்பது குறிப்பிட்ட நிறையும் இடத்தை அடைக்கும் பண்பும் கொண்ட அனைத்துமாகும். அதாவது நாம் நிஜ உலகில் காண்பன, உணர்வன அனைத்தும் பருப்பொருள்கள். உங்கள் கற்பனையில் மட்டுமே உள்ள ஒன்று நிஜத்தில் இருக்கின்ற பொருளில் மாற்றத்தை உண்டாக்க முடியுமா? இதற்கு நடைமுறை நிகழ்வு ஏதும் ஆதாரமாக இல்லை. எனவே உயிரினங்கள் கடவுளால் படைக்கப்பட்டன என உறுதியாக சொல்ல முடியவில்லை. அதுவே ஒரு அடிப்படை இயற்கை விதியாக இருந்தால் மட்டுமே படைப்புக்கொள்கை சாத்தியமாகும். வேறேதும் நடைமுறை நிகழ்வுகளுடன் பொருந்திப் போகிற ஒரு சாத்தியம் உண்டு என்றால் நாம் அதையே தேர்ந்தெடுக்க வேண்டும். (*rewrite)

படைப்புக் கொள்கை:
+ கடவுள் உயிர்களைப் படைத்தார்
+ கடவுளுக்கு நோக்கம் உண்டு. உடல் கிடையாது. எல்லாம் வல்லவர்.
– பரு உலகுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒன்று பரு உலகில் மாற்றம் செய்ய முடியும் என்பதற்கு ஆதாரம் இல்லை.
– ஒரே சாத்தியம் இது ஒரு அடிப்படை இயற்கை விதியாக இருப்பது மட்டுமே. எனவே ஏற்கெனவே நாம் கொண்டிருக்கும் அறிவியலால் எந்த விளக்கமும் சொல்ல முடியாவிட்டால் மட்டுமே இந்த சாத்தியத்தை மேலும் ஆயலாம்.

இதுவரை பார்த்தவரையில் உயிரினங்கள் தானாக தொன்றியிருக்கவோ படைக்கப்பட்டிருக்கவோ வாய்ப்பு குறைவு என்றாகின்றது. வேறு சாத்தியங்கள் எதுவும் இல்லை என்றால் மட்டுமே இவற்றை மேலும் நாம் ஆய்வோம்.

அறிமுகம்

‘There is grandeur in this view of life … that from so simple a beginning endless forms most beautiful and most wonderful have been, and are being, evolved.’
 ‘ஒரு எளிய தொடக்கத்திலிருந்து எண்ணில் அடங்கா வடிவங்களில் அழகானவையும், அற்புதமானவையும் பரிணமித்தன, பரிணமித்துக்கொண்டு இருக்கின்றன என்ற உயிர் பற்றிய இந்தப் பார்வைதான் எத்தனை விசாலமானது. – சார்லஸ் டார்வின்’

உயிரினங்களின் தோற்றம் குறித்து (On the origin of species) என்ற சார்லஸ் டார்வினின் புகழ்பெற்ற நூலில் இருந்து.

இந்த உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் – மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து – எப்படித் தோன்றின என்று நாம் அனைவருமே ஒரு முறையாவது வியந்திருப்போம். எத்தனை எத்தனை வடிவங்கள். அமைதியாக நகரும் நத்தை. மானை அடித்துத் தின்னும் புலி. மரங்கள் செடிகள் கொடிகள். அழகிய நிறங்களில் கண்ணைப் பறிக்கும் பூக்கள், அவற்றின் மணம். எல்லாம் நம் மனதைக் கொள்ளை கொள்கின்றன.

உயிரினங்கள் எப்படித் தொன்றின? எல்லாம் ஒரே நேரத்தில் தோன்றினவா? உயிர்களின் தோற்றத்துக்கும் இருப்புக்கும் பின்னால் என்ன நோக்கம் இருக்க முடியும்.

மனிதனின் வரலாறு முழுவதுமே இந்தக் கேள்வியும், வியப்பும் இருந்திருக்கிறது. இது பற்றிய மனிதனின் புரிதலும் காலந்தோறும் மாறி வந்திருக்கிறது. எனினும் நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்புதான் இது பற்றிய ஒரு தெளிவான பார்வை தோன்றியது என்றால் அது மிகையல்ல. சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை உயிர்களின் தோற்றம் பற்றிய புதிரை விடுவித்தது. இக்கொள்கை சிந்தனையாளர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை, புகழ்பெற்ற பிரிட்டிஷ் விலங்கியலாளரான ஜி.ஜி.சிம்சன், “1859க்கு முன்னர் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க செய்யப்பட்ட முயற்சிகள் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாதவை; சொல்லப்போனால் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதே நல்லது” என்று கூறுவதை வைத்துப் புரிந்து கொள்ளலாம். 1859இல்தான் டார்வின் பரிணாமக் கொள்கையை பதிப்பித்தார்.

டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கையை இவ்வாறு சொல்லலாம். ஒரு குட்டி தோன்றும்போது அது அதன் பண்புகளைப் பெற்றோரிடமிருந்து பெறுகிறது. அவ்வாறு பெற்றோரிடமிருந்து குட்டிக்குக் கடத்தப்படும் பண்புகள், பெற்றோருடையதை பெரும்பாலும் முழுமையாக ஒத்திருப்பினும், சில நேரங்களில், சில குட்டிகளில், சின்னஞ்சிறு மாற்றங்களுடன்  கடத்தப்படுகின்றன. இந்த மாற்றம் புதிய குட்டி வாழவும், அது புதிய குட்டிகளைப் போடவும் உதவினால், அந்தக் கூட்டத்தில் பல்கிப் பெருகும்; அதாவது நீண்ட காலத்தில் அந்த மாற்றமடைந்த பண்பைக் கொண்டவர்கள் நிறைய பேர் அந்த உயிரிக் கூட்டத்தில் இருப்பர். இந்த மாற்றம் ஒரு வேளை நேரெதிராக குட்டியின் வாழ்க்கைக்கும், இனப்பெருக்கத்துக்கும் தீது செய்யுமானால் அந்த கூட்டத்தில் இருந்து அருகி மறையும்.

டார்வினுக்கு முன்னர் இந்தப் பெருங்கேள்வியை சிந்தனையாளர்கள், தத்துவஞானிகள் எப்படி எதிர்கொண்டார்கள் என்று காண்பது ஆர்வமூட்டுவது. டார்வின் ஒன்றும் தனது கொள்கையை தனி மனிதராக வந்தடைந்துவிடவில்லை. அவரது  சிந்தனையும் கொள்கையும் அவருக்கு முந்தைய சிந்தனையாளர்களின் தொடர்ச்சிதான். உண்மையில் டார்வின் அவரது பரிணாமக் கொள்கையைப் பதிப்பித்திருக்காவிட்டாலும், இந்தப் புரிதலை வேறொருவர் வந்தடைந்திருப்பார் என்பதே உண்மை. உண்மையில் அப்படித்தான் நடந்தது. டார்வின் பரிணாமம் பற்றிய புரிதலை அடைந்த பின்னரும் வெகு காலமாக அதைப் பதிப்பிக்கவில்லை. ஆல்ப்ரட் ரஸ்ஸல் வாலஸ் என்ற இன்னொரு இளைஞரும் டார்வின் வந்தடைந்த அதே முடிவுகளுக்கு தன்முயற்சியாகவே வந்தடைந்தார். இதை அறிந்த பின்னரே, டார்வின் தனது கொள்கையை பதிப்பிக்க விரைந்தார். இவை காட்டுவது என்ன? இந்த சிந்தனைச் செழிப்பு ஒரு சமூக இயக்கம். தனி மனிதர்களின் பங்கு அடுத்த நிலையை நோக்கி நகர உதவுவதே ஆகும்.

ஆக்கல் கொள்கை

மைக்கேலேஞ்சலோ ஓவியம்டார்வினுக்கு முன்னர்  இருந்த பொதுவான புரிதல் உயிரினங்கள் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டன என்பதாகும். இந்தப் பார்வையை புரிந்து கொள்ள 1802இல் வாழ்ந்த வில்லியம் பாலியின் வாதங்களை பார்க்கலாம். உயிரினங்களின் உடல் அமைப்பும், செயல்படும் விதமும் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. இவ்வளவு சிக்கலானவை தானாகத் தோன்றி இருக்க சாத்தியம் இல்லை. நீங்கள் நடந்து செல்கிறீர்கள். ஒரு கல் உங்கள் காலைத் தடுக்கிறது என்க. அந்தக் கல் அங்குத் தானாகக் கிடக்கிறது என்று நினைப்பீர்கள். அது கல்லாக இல்லாமல் ஒரு கைக் கடிகாரமாக இருந்தால்? அதை யாரோ செய்து அங்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றுதானே நினைப்பீர்கள். ஏன் அவ்வாறு நினைக்கிறீர்கள்? ஏனென்றால் கல் ஒன்றும் சிக்கலான அமைப்பையோ செயல்பாட்டையோ கொண்டதல்ல. ஆனால் கடிகாரம் சிக்கலானது. நுண்ணிய செயல்களைச் செய்ய வல்லது. அதற்கென்று ஒரு நோக்கம் இருக்கிறது, மணியைக் காட்டவேண்டும். அதன் அமைப்பு அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  வில்லியம் பாலி உயிர்களின் அமைப்பையும், செயல்படும் விதத்தையும் ஒரு கடிகாரத்தினுடையவற்றுடன் ஒப்பிட்டு வாதிட்டார். கடிகாரம் என்று ஒன்று இருப்பதே அதை ஆக்கியவன் ஒருவன் இருப்பதற்கு சான்று அல்லவா? என்றார். எனினும் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆக்கியோன் என்று ஒருவன் உண்டு என்றால் அவனை ஆக்கியது யார்?. இதைத்தான் தத்துவஞானி டேவிட் ஹயூம் ஆக்கல் வாதத்துக்கு எதிராகக் கேட்டார். இதற்கு ஆக்கல் வாதம் தெள்ளிய பதிலைத் தரவில்லை.

முற்தோற்றம் ( preformation)

நீங்கள் சிறுவயதில் எப்படி இருந்தீர்கள். சிறிய ஆளாக இருந்தீர்கள். வயதாக ஆக பெரிய ஆளாக ஆனீர்கள். அதாவது எல்லா உறுப்புகளும் முன்பே இருந்தன. கால ஓட்டத்தில் அவை அளவில் பெரிதாகி உள்ளன. ஆகவே, உயிரி தோன்றும்போதே எல்லாவற்றையும் பெற்றிருக்கிறது, ஆனால் அவை கண்ணுக்குத் தெரியாத அளவில் சிறியதாக இருக்கின்றன. பின்னர் வளர்கின்றன. புதிய குட்டிகளும் ஒரு உறுப்பைப் போலத்தான் தாயிடம் வளர்கின்றன. எனவே, புதிய குட்டி அதன் தாய் பிறக்கும் போதே அதன் வயிற்றில் மிகச் சிறிய அளவில் தோன்றி இருக்க வேண்டும். எனவே ஒவ்வொரு உயிரியின் வயிற்றிலும் அவை ஈன இருக்கின்ற குட்டிகள் சிறிய வடிவிலும், அந்தக் குட்டிகளின் வயிற்றில் அவற்றின் குட்டிகளுமாக, எண்ணிலடங்கா மொத்த வழித்தோன்றல்களும் , ஏற்கெனவே தோன்றி இருக்க வேண்டும். எண்ணிலடங்கா உயிரிகளின் சிறிய வடிவங்கள் குறிப்பிட்ட வடிவத்தை உடைய ஒரு உயிருக்குள் அடைக்கப் பட்டு விட முடியுமா? இன்றைய காலத்தில் நமக்கு இது ஒரு சாத்தியமில்லாத ஒரு வாதமாக இருக்கலாம். ஆனால், பழங்காலத்தில், நுண்ணோக்கி ஆக்கப்படாமல் இருந்த காலத்தில், இந்தக் கருதுகோளை முழுமையாக ஒதுக்கி விட முடியவில்லை. உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் – இந்த பழைய கருதுகோள் தவறுதான்.

உயிரின வகைப்பாடு

வெறும் வெள்ளைக்கருவும், மஞ்சள் கருவும் உள்ள முட்டையிலிருந்து சிக்கலான உறுப்புகளைக் கொண்ட கோழி தோன்ற முடிகிறது. எனவே, எளிய பொருள்களிலிருந்து சிக்கலான உயிரிகள் தோன்றுவது சாத்தியம்தான். எல்லா உயிரிகளும் முன்னரே தோன்றியிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய வடிவங்கள் தோன்ற வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்றது அரிஸ்டாட்டிலின் பார்வை.

அரிஸ்டாட்டில் உயிரியலின் தந்தை என்று அழைக்கபடுகிறார். அவர்தான் தற்போதுள்ள அறிவியல் பூர்வமான உயிரியல் பார்வையின் தொடக்கப் புள்ளி. அவரது முக்கிய பங்களிப்பு உயிரின வகைப்பாடு ஆகும். அவர் உயிரினங்களை அவற்றின் வெளிப்புறப் பண்புகளை வைத்து – ஊர்வன, பறப்பன, பாலூட்டுவன என்று – பிரித்தார்.

லாமார்க்கின் கொள்கை

மர இலை உண்ணும் ஒட்டகச்சிவிங்கி உயிரினங்கள் எப்படித் தோன்றுகின்றன என்ற கேள்விக்கான நவீன தேடல் பாதிரியார் லாமார்க்-குடன் தொடங்குகிறது. ஒவ்வொரு உயிரினமும் இன்னொன்றிலிருந்து உருவாகி வந்ததாகவும், ஒவ்வொரு தலைமுறையிலும் சின்னஞ்சிறு மாற்றங்கள் தோன்றி, அவை கால ஓட்டத்தில் சேர்ந்து சேர்ந்து முந்தைய உயிரினத்திலிருந்து முற்றிலும் வேறுபடுமாறு  ஆக்கிவிட்டதாகவும் சொன்னார். உண்மையில் பரிணாமத்தை முதலில் கற்பித்தவர்[1] லாமார்க்தான்.

ஒவ்வொரு தலைமுறையிலும் ஏன் சின்னஞ்சிறு மாற்றங்கள் தோன்ற வேண்டும். லாமார்க் அந்தப் புதிய பண்பு நலன்களை அந்த உயிர்கள் முயற்சி செய்து பெற்றுக் கொள்கின்றன என்றார். ஓர் ஒட்டகச் சிவிங்கி மர இலையைத் திங்க கழுத்தை நீட்டி முயலும். இதனால் அதன் கழுத்து கொஞ்சம் போல நீளும். கழுத்தின் இந்த மாற்றம் அதன் குட்டிக்குக் கடத்தப்படும். இவ்வாறாக சில தலைமுறைகளில், ஒவ்வொரு தலைமுறையிலும் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்ட கழுத்து நாம் இன்று பார்க்கும் வகையில் ஆனது என்றார்.

லாமார்க்கின் கொள்கை முழுவதும் சரி என்று சொல்ல முடியாது. என்ன தவறு என்று பின்னர் காண்போம். எனினும், பண்புகள் தலைமுறைகளிடையே கடத்தப்படுகிறது என்று முதலில்  கூறிய பெருமை அவரையே சாரும். கடத்தப்படும் விதம் பற்றிய அவரது விளக்கம் தவறாகும்.

இயற்கைத் தேர்வு

லாமார்க் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து, கடத்தப்படும் விதத்தை தெளிவாக்கினார் டார்வின். 1830 இல் பீகிள் என்ற கப்பல் இங்கிலாந்து அரசால் வரைபடங்களை உருவாக்குதல் போன்ற பணிகளுக்காக தென் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களுக்கு பயணித்தது. இதன் கேப்டனாக இருந்த ராபர்ட் ஃபில்ட்ஸ்ராய்-யின் தோழராகவும், இயற்கையிலாளராகவும்  பயணிக்கும் வாய்ப்பு சார்லஸ் டார்வினுக்குக் கிடைத்தது. டார்வின் இயற்கையியலில் ஆர்வம் கொண்டிருந்தவராக இருந்தார்.அன்றைய ஐரோப்பாவில் இயற்கையை, குறிப்பாக விலங்குகளையும், தாவரங்களையும், ஆய்ந்தவர்களை இயற்கையியலாளர் – naturalist – என்று அழைத்தார்கள். மதம், கடவுள் ஆகியவற்றை படிப்பது இறையியல் -theology- ஆகும்.

டார்வினின் பறவை வகைகள்  இந்தப் பயணத்தின்போது அவர்கள்  சென்ற தீவுகளில் இருந்த பறவையினங்களைக் கண்டு டார்வின் ஆர்வங்கொண்டார். அவற்றுக்கு இடையில் இருந்த ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் காண்கையில், அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்பது தெளிவானது. எனில் ஒவ்வொரு உயிரினமும், அவை அவை வாழும் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. இது எப்படி நிகழ்கிறது?

பொதுவாக ஒரு உயிரினத்தின் மக்கட்தொகை பெருக்கல் மடங்கில் பெருக முயலும். ஆனாலும், ஒரு கட்டத்திற்குப் பிறகு, உணவு போன்ற தேவைகள் போதாமல் போவதால், அவ்வாறு பெருக முடியாது. எனவே, தனி உயிர்கள் இந்தத் தேவைகளுக்காக  போட்டியிடும். இதை ரொபர்ட் மால்தஸ் என்ற பொருளாதாரவியலாளர் விளக்கி இருந்தார். டார்வின் இந்த விதிகளை தன்னுடைய பிரச்சினையில் அப்பினார் ( apply – அப்பு).

இப்படி வாழ்வதற்காக தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும் தனி உயிரிகளில் (தனி உயிரி – individual) ஏதேனும் ஒன்றில் அதன் கருவுருதலின்போது பெற்றோரிடமிருந்து பெரும் பண்புகளில் நிகழும் எந்த சிறு மாற்றமும் அந்த தனி உயிரி வாழவும், குட்டியிடவும் உதவுமானால் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப் படும். மாறாக அந்த மாற்றம் தீய விளைவுகளைத் தந்தால் அந்த மாற்றத்தைக் கொண்ட தனி உயிரி மற்றவைகளுடன் ஒப்பிட தோற்று அதிக குட்டிகளை இடாமல் இறந்து போகும். இவ்வாறு தீய விளைவுடைய மாற்றம் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுவது அருகி அந்த மாற்றமே மறைந்து ஒழியும். இவ்வாறாக இயற்கைச் சூழல் மாற்றம் உருவாகக் காரணமாக அல்லாமல் மாற்றம் தோன்றிய பின்னர் அது அடுத்த தலைமுறைக்குச் செல்ல வேண்டுமா, கூடாதா என்று தேர்வு செய்வதாக ஆகிறது. இந்த செயல்பாட்டில் இயற்கைக்கு என்று எந்த நோக்கமும் இல்லை என்பதை புரிந்து கொள்வது முக்கியமானது. கிராமங்களில் நெல் வயல்களில் பதரைப் பிரிக்க நெல்லை உயரத்திலிருந்து கொட்டுவர். எடை மிகுந்த நெல் கீழே விழும்.  எடை குறைந்த பதர் காற்று வீச்சில் இழுக்கப்பட்டு சற்று தள்ளி விழும். இதில் எப்படி காற்றுக்கோ அல்லது மொத்தமாக இயற்கைக்கோ எந்த நோக்கமும் இல்லையோ அதே போன்றே இயற்கைத் தேர்வில் மாற்றங்களைத் தேர்வு செய்வதில் எந்த நோக்கமும் இயற்கைக்கு இருப்பதில்லை.

 


 

— சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam

  • 1.0 —  24 September 2011
  • 1.1 — Add notes on Sexual selection, introduce genes

 


 

References:

  1. On the origin of species : Charles Darwin
  2. The Selfish Gene: Richard Dawkins
  3. 59 genetics ideas you really need to know : Mark Henderson

அறிமுகம்

உயிரினங்களின் தோற்றம்

குறித்து

அல்லது

இயற்கைத் தேர்வின் காரணமாக தக்க இனங்கள் தழைத்தல்

அறிமுகம்

H.M.S. பீகிள் கப்பலில், ஒரு இயற்கையாளனாக, இருந்தபோது, தென் அமெரிக்காவில் இருக்கும் உயிர்களின் பரவல் குறித்தும், அந்தக் கண்டத்தில் தற்காலத்தில் வாழும் உயிரினங்கள் மறைந்த உயிரினங்களுக்குக் கொண்டிருக்கும் புவியியற் தொடர்புகள் குறித்தும்  சில உண்மைகளால் நான் தட்டப்பட்டேன். இந்த உண்மைகள், நமது தலைசிறந்த தத்துவஞானிகளுள் ஒருவரால் மர்மங்களின் மர்மம் என்று அழைக்கப்பட்ட, உயிரினங்களின் தோற்றம் பற்றிய புதிருக்கு, பின்வரும் அத்தியாயங்களில் காணப்படவிருக்குமாறு, கொஞ்சம் வெளிச்சம் தருகின்றன. 1837 இல், எனது வீட்டுக்குத் திரும்பிப் பயணித்தபோது, இந்தக் கேள்வியுடன் தொடர்பு இருக்க ஏதேனும் சாத்தியமுள்ள அனைத்து உண்மைகளையும் பொறுமையாகத் தொகுத்துப் பார்ப்பதன் மூலம் இது பற்றி ஏதாவது ( கண்டு ) அடையலாம் என்று எனக்குத் தோன்றியது. ஐந்தாண்டு (இதில்) பணியாற்றிய பின்னர் இந்த விடயத்தை ஆயவும், சில சிறு குறிப்புகளை வரையவும் செய்தேன்; இவற்றை 1844 இல், பின்னர் எனக்கு சரியானதுதான் என்று தோன்றிய, ஒரு துணிபுத்தொகுதியாக விரித்தேன்; அப்போதிருந்து இன்று வரை இந்த நோக்கத்தை அடைய நிதானமாகச் சென்று கொண்டிருக்கிறேன். நான் முடிவுக்குவருவதில் அவசரப்படவில்லை எனக் காட்டுவதற்காக, இவ்வாறு எனது தனிப்பட்ட விவரங்களுக்குள் நுழைவதற்காக நான் மன்னிக்கப்படலாம் என நம்புகிறேன்.

எனது பணி இப்பொழுது (1859) ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டது; இதை முழுமையாக்க எனக்கு பல ஆண்டுகள் பிடிக்குமானாலும், எனது உடல் நலன் நன்றாக இல்லாததால், உடனடியாக இதை பதிக்குமாறு அவசரப்படுத்தப் பட்டேன். குறிப்பாக, இப்பொழுது மலேயத் தீவுக்கூட்டங்களின்  இயற்கை வரலாறை ஆராந்துவரும், திரு. வாலஸ், உயிரினங்களின் தோற்றம் பற்றி நான் வந்தடைந்த அதே துணிபுகளுக்குக் கிட்டத்தட்ட சரியாக வந்தடைந்திருப்பதால் இதை வேகமாகச் செய்ய வேண்டியவனாயிருக்கிறேன். 1858 இல், அவர் இதே விடயத்தில் ஒரு மெமோய்ரை, பின்னர் சர் சார்லஸ் லைலிடம் அளிக்கவும் என்ற வேண்டுகோளுடன், எனக்கு அனுப்ப, அதை சர் சார்லஸ் லைல் லினியான் குழுமத்துக்கு அனுப்ப, அது அக்குழும இதழின் மூன்றாவது தொகுதியில் பதிக்கப்பட்டது. எனது பணி பற்றி அறிந்திருந்த, சர் C. லைல், டாக்டர் ஹூக்கர் இருவரும் — பிந்தியவர் எனது 1844 வரைவைப் படித்திருந்தார் —  திரு.வாலலின் சிறப்புக்குரிய மெமொய்ருடனும், எனது சில மெனுஸ்கிரிப்டுகளின் சாரத்துடன் பதிப்பித்து வெளியிடுவது சிறந்தது எனக் கூறி என்னை பெருமைக்குள்ளாக்கினர்.

இப்போது நான் பதிப்பிக்கும் இந்நூல் அவசியமாகவே துல்லியமற்றது. நான் எனது பல கூற்றுகளுக்கு ரெஃபரன்ஸ்களோ, அத்தாரிட்டிகளோ அளிக்க இயலாது; எனது கூர்மையில் நம்பிக்கை செலுத்தும் வாசகனை நான் நம்பிக்கொள்ள வேண்டியதுதான். நான் எப்பொழுதும் நல்ல அத்தாரிட்டிகளை மட்டுமே நம்பவேண்டுமென எச்சரிக்கையுடன் இருந்தாலும், பிழைகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனது துணிபுகளுக்கு அடிப்படையாக இருக்கும் உண்மைகளை விரிவாகவும், ரெஃபெரன்ஸ்களுடனும் இனி பதிப்பிக்க வேண்டியதன் தேவையை எவரையும் விட அதிகமாக நான் உணர்கிறேன்; இதனை வருங்காலப் பணியில் செய்வேனென நம்புகிறேன். இந்தத் தொகுதியில் சான்று தரமுடியாத, நான் வந்தடைந்துள்ள முடிபுகளுக்கு  பெரும்பாலும் நேர் எதிராகச் செல்லும் வண்ணமான, விசயங்கள் ஏதும் பேசப்படவில்லை என்பதை நன்கு அறிவேன்.  ஒவ்வொரு கேள்வியின் இருபுறத்து உண்மைகளையும், வாதங்களையும் முழுமையாகக் கூறுவதன் மற்றும் சமன்செய்வதன் மூலம் மட்டுமே ஏற்கத்தக்க முடிவை அடையமுடியும்; அது இங்கு சாத்தியமில்லை.

பற்பல இயற்கையாளர்களிடமிருந்து, சிலர் எனக்குத பெர்சனலாக$ தெரியாதவர்கள், பெற்ற உதவியைக் குறிப்பிடும் திருப்தியை இடமின்மை தடுப்பதற்காக வருந்துகிறேன். எனினும், அவரது அறிவுச் செழுமையாலும், சிறந்த பகுத்தறிவாலும், சாத்தியமான ஒவ்வொரு வழியிலும் எனக்கு உதவிய, Dr ஹூக்கர் -க்கு நான் கொண்ட கடனை தெரிவிக்காமல் இத்தருணத்தைக்கடக்க இயலாது.

உயிரினங்களின் தோற்றத்தைக் கருதுகையில், உயிரினங்களின் பரஸ்பர விருப்பு வெறுப்புகள், அவற்றின் கருவியல் தொடர்புகள், அவற்றின் புவியிடப்(geographical) பரவல், புவியியல்(geological) தொடர்ச்சி, மற்றும் பிற இத்தகைய விசயங்களைக் கண்ணுறும் ஒரு இயற்கையியலாளன், ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியாகப் படைக்கபடவில்லை, ஆனால் அவை பிற உயிரினங்களிடமிருந்து, ஒரு வகை போல, வழித்தோன்றியிருக்கின்றன என்ற முடிவுக்கு வருவான். எனினும், இத்தகைய  முடிவு, இவ்வுலகில் உள்ள எண்ணிலா உயிரினங்கள் எவ்வாறு நாம் வியந்து ரசிக்கும் வண்ணம் மிகத்துல்லியமான உடலமைப்பும், கோ$- இயைபும் பெற மாற்றப்பட்டன என்பதைக் விளக்காத$/காட்டாத வரையில் ஏற்கத்தக்கதாகாது. வேறுபாட்டின் ஒரே சாத்தியமுள்ள காரணமாக பருவம்(climate), உணவு போன்ற புற நிலமைகளை இயற்கையிலாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். பின்னர் நாம் காண இருக்குமாறு, ஒரு மிகக் குறுகிய அர்த்தத்தில் மட்டும் இது உண்மையாக இருந்தாலும் இருக்கலாம்; ஆனால், மரங்களின் பட்டைகளுக்குக் கீழ் உள்ள பூச்சிகளை பிடிக்க வியக்கும் வண்ணம்  குதிகால், வால், அலகு, நாக்கு இவை இயைபுற்ற(adapted) மரங்கொத்தி போன்றவற்றின் உடலமைப்புக்கு வெறுமே புற நிலமைகளை காரணமென்பது சரியாகாது. Misseltoe ஒட்டுண்ணியை எடுத்துக் கொள்ளுங்கள். அது குறிப்பிட்ட மரங்களிலிருந்து உணவைப் பெறுகிறது. அது சில பறவைகளால் கடத்தப்பட வேண்டிய விதைகளைக் கொண்டிருக்கிறது. அதன் ஆண்-பெண் பால் பூக்களைக் கொண்டுள்ளதால் பூச்சிகள் மகரந்தத்தைக் கடத்த வேண்டிய கட்டாயத்துடன் உள்ளது. இந்த ஒட்டுண்ணியின் உடலமைப்புக்குக் காரணமாக, அதன் பல்வேறு உயிரிகளுடனான உறவுகள்$relations/தொடர்புகள் உடன், புற நிலமைகளின் விளைவுகளை, அல்லது பழக்கத்தை$habit, அல்லது செடியின் விருப்பத்தையோ கூறுவது, முன்னர் கண்டதற்குச் சமமாக சரியானதாகாது.

‘படைப்பின் தடங்கள்’ (Vestiges of Creation)  இன் ஆசிரியர், சில குறிப்பிட்ட தலைமுறைகளுக்குப் பின்னர், ஏதோ ஒரு பறவை மரங்கொத்தியைப் பெற்றது, ஏதோ ஒரு தாவரம் Misseltoeவைப் பெற்றது, நாம் இன்று பார்ப்பதைப் போல இவை துல்லியமாக உருவாக்கப்பட்டன என்று கூறுவார் எனக் கொள்கிறேன்$presume; ஆனால்,உயிரிகளின் ஒன்றுக்கொன்றுடனும், அவற்றின் இயற்பியற் வாழ் நிலமைளுடனுமான கோ-இயைபை தொடாததாலும், விளக்காததாலும்,  இந்த $assumption எனக்கு  ஒரு விளக்கம் ஆகத் தெரியவில்லை.

ஆகவே, மாறுதல் மற்றும் கோ- இயைபு இவற்றின் காரணங்கள் குறித்து தெளிவான புரிதல் பெறுவது மிக முக்கியமானது. வீட்டு[வளர்ப்பு] விலங்குகளையும், பயிரிடப்படும் செடிகளையும் கவனத்துடன் ஆய்ந்தால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் சிறந்த வாய்ப்பைப் பெறுவது சாத்தியமாகும் என எனது $observationஇன் ஆரம்பத்தில் எனக்குத் தோன்றியது. அந்த நினைப்பு என்னை ஏமாற்றிவிடவுமில்லை; வீட்டுவளர்ப்பின்போதான (domestication) மாறுபாடு குறித்த நமது அறிவு, என்னதான் துல்லியமற்றதாயினும், இப்புதிரை விடுவிக்கத் தக்க சிறந்த, பிரச்சினையற்ற துப்பாகும் எனக் கண்டேன். இது குறித்த ஆய்வுகள், என்னதான் இயற்கையியலாளர்களால் புறக்கணிக்கப்பட்டாலும், அவற்றின் பெருமதியை எடுத்துக் கூற வேண்டி இருக்கும்.

இத்தகைய புரிதலிலிருந்து, இந்நூலின் முதல் அத்தியாயத்தை வீட்டுவளர்ப்பின்போதான மாறுபாடு க்கு ஒதுக்குகிறேன். இவ்வாறாக நாம் , பெருமளவில் மரபு மாற்றம் முதலில் சாத்தியம்தான் என்றும், அதைப் போல அல்லது அதனினும் முக்கியமாக, அடுத்தடுத்து ஏற்படும் சிறு மாற்றங்களை தேர்வு செய்து தொகுப்பதால் மனிதனுக்குக் கிடைக்கும் சக்தியின் பெருமையையும் காண்போம். பின்னர் நான் உயிரினங்கள் இயல்பு நிலையில் அடையும் மாற்றங்கள் -ளுக்குள் நுழைவேன்; ஆனாலும், துரதிர்ஸ்டவசமாக, இவற்றை முழுமையாக விளக்க பெருமளவிளான தரவுகளைத் தரவேண்டி இருக்கும் என்பதால், மிகச்சுருக்கமாகவே நீண்ட நேரத்துக்கு பேச வேண்டி இருக்கும். எனினும், நாம் மாற்றங்கள் தோற்றுவிக்கப்படுவதற்கு தோதான சூழல் குறித்து பேசத் தக்கவர்களாவோம். அடுத்த அத்தியாயத்தில் எல்லா உயிர்களும் பல்கிப் பெருகுவதன் காரணமாக அவற்றுள் நடக்கும் வாழ்க்கைப் போராட்டம் எடுத்துக் கொள்ளப்படும். இது, விலங்கு மற்றும் தாவர ராஜ்ஜியங்களுக்கு, மால்தஸின்(Malthus) கொள்கையை பிரயோகிப்பதாகும். ஒவ்வொரு உயிரினத்திலும் வாழமுடிந்த அளவையும் தாண்டி ஆட்கள் பிறக்க, பிறக்க, வாழ வேண்டி போராடுவது மீண்டும், மீண்டும் அரங்கேறுகிறது; ஆகவே, எந்த ஒரு உயிரும், சிக்கலும் தொடர்மாற்றங்களும் கொண்ட வாழ்க்கைச்சூழலில், அதற்கு சாதகமாக கொஞ்சமே, கொஞ்சம் ஏதாவது ஒருவகையில் மாற்றம் கொண்டாலும் அது இயற்கையாக தேரும். தேர்ந்த எந்த ஒரு வகையும் அதன் புதிய மாறிய வடிவத்துடன் பெருகத் தொடங்கும்.

இந்த அடிப்படை இயற்கைத் தேர்வு கொள்கை கொஞ்சம் நீளமாகவே நான்காவது அத்தியாயத்தில் பேசப்படும்; அப்போது இயற்கைத் தேர்வு எவ்வாறு சிறப்பில்லாத உயிர் வடிவங்களை நீக்கி, யாது பண்பு விலகல் என நான் அழைப்பது -க்குக் கிட்டத்தட்ட முழுமையாகக் காரணமாகிறது என நாம் காண்போம். அடுத்த அத்தியாயத்தில் சிக்கலானதும், குறைவாகவே அறியப்பட்டதுமான மாற்றங்களின் விதிகளைப் பேசுவேன். அதற்கடுத்த ஐந்து அத்தியாயங்களில், இக்கொள்கையை ஏற்றுக் கொள்வதைக் கடினமாக்கும் விசயங்கள் பேசப்படும்; அவை, முதலில் மாறுவதிலுள்ள கடினங்கள், அதாவது எப்படி ஒரு எளிய உயிரோ உறுப்போ வளர்ந்த(developed) உயிரோகவோ,  சிறப்பாக உருவாக்கப்பட்ட உறுப்பாகவோ மாறமுடியும் என்பது; இரண்டாவதாக, Instinct, அல்லது விலங்குகளின் எண்ண ஆற்றல்; மூன்றாவதாக, கலப்பு(Hybridism), அல்லது உயிரிங்களின் மலட்டுத்தன்மையும், வேறுபாடுகள் கலக்கப்படும்போது செழிப்பு(fertile) ஆதலும்; நான்காவதாக, புவியியல் பதிவுகளின் துல்லியமின்மை. அடுத்த அத்தியாயத்தில் கால மாற்றத்தில் உயிர்கள் அடையும் புவியியல் தொடர்ச்சி குறித்து காண்பேன். பதிமூன்று, பதினான்கில், இட மாற்றத்தில் அவற்றின் புவியிடப் பரவலைக் காண்பேன்; பதினான்காவதில், உயிர்கள் பக்குவமடைந்த பின்னும், கருவாக இருக்கும்போதுமான வகைப் படுத்துதலும், பரஸ்பர ஈர்ப்புகளும். கடைசி அத்தியாயத்தில், மொத்தப் பணியும் நிறைவுரையுடன் சுருக்கமாகக் காணப்படும்.

உயிர்களினதும், வகைகளினதும் தோற்றம் பற்றி நிறைய விளக்கப்படாமல் போனது, நாம் நம்மைச்சுற்றியுள்ள உயிர்களின் பரஸ்பர உறவுகளை அறியாமல் தொடர்ந்து வரும் புறக்கணிப்பைக் கருதைகயில், ஆச்சர்யப்படத் தக்கதல்ல. ஏன் ஓர் உயிரினம் பரந்தும், மிகுந்தும் இருக்கிறது என்றும், இன்னொன்று அரிதாகவும், பரவாதும் இருக்கிறது என்றும் யார் சொல்வார்?  எனினும், இந்த உறவுகள்தான், உலகின் ஒவ்வொரு வசிப்பாளியின் தற்போதைய நன்மையையும், எதிர்கால வெற்றியையும், அடைய வேண்டிய மாற்றங்களையும், தீர்மானிக்கப் போகின்றன என்பதால் இக்கேள்விகள் முக்கியமாகின்றன. பலவும் மர்மமாக இருந்தாலும், ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியாக படைக்கப்பட்டது என்பது தவறு. ஒரு உயிரினத்தை இன்னொன்றாக உடனே மாற்ற முடியாது என முழுமையாக ஏற்கிறேன்; ஆனால், ஒவ்வொரு உயிரினமும் இன்னொரு, பெரும்பாலும் அழிந்துபோன, உயிரினத்தின் தொடர் வழித்தோன்றல்கள் என்கிறேன். மேலும், இயற்கைத் தேர்வே மிக முக்கியமான, ஆனால் அது மட்டுமேயல்லாத, மாற்றங்களின் காரணி என்கிறேன்.